திருப்பதி கும்பாபிஷேகம் ; 9 நாட்கள் பக்தர்களுக்கு தடை
திருப்பதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்களுக்கு 9 நாட்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி
திருப்பதி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 12 ஆண்டுகள் கழித்து கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஆகஸ்ட் 12 ந்தேதி முதல் 16 ந்தேதி வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து திருப்பதியில் ஆக.9 முதல் 17ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கபட்டு உள்ளது
திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம்,மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story