பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும் மோடி, அமித்ஷா கட்-அவுட்கள்!


பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும்  மோடி, அமித்ஷா  கட்-அவுட்கள்!
x
தினத்தந்தி 17 July 2018 12:05 PM GMT (Updated: 17 July 2018 12:05 PM GMT)

தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷாவின் கட்-அவுட்களை பறவைகளை விரட்டும் பொம்மையாக விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

பெங்களூரு,

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்மங்களூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றிப்பெற்றது. தேர்தல் முடிந்த நிலையில் பிரசாரத்திற்காக பயன்படுத்திய பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் எடியூரப்பாவின் கட்-அவுட்களை எடுத்து சென்ற விவசாயிகள் விளை நிலங்களில் பறவைகளை விரட்டுவதற்கு பொம்மையாக பயன்படுத்தி வருகின்றனர். மழை காரணமாக மாநிலத்தில் நெல் பயிரிட விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். இதற்காக விதை நெல் பாவிய இடங்களில் அதனை பாதுகாக்கும் விதமாக கட்-அவுட்களை பயன்படுத்தியுள்ளனர்.

 கட்சி தலைவர்களின் கட்-அவுட்களை இதுபோன்று பயன்படுத்தக் கூடாது என எந்தஒரு கட்டுப்பாடும் கிடையாது என கூறுகிறார்கள். 

Next Story