மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து 36,869.34 புள்ளிகளாக உள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் உலோகம், எண்ணெய் மற்றும் வாயு, உள்கட்டமைப்பு, வங்கி உள்ளிட்ட துறைகளில் 0.88 சதவீத வளர்ச்சி காணப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் 150.74 புள்ளிகள் உயர்ந்து 36,869.34 புள்ளிகளாக உள்ளது. இது முந்தைய 36,749.69 புள்ளிகள் என்ற பதிவை விட அதிகம் ஆகும்.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 41.15 புள்ளிகள் உயர்ந்து 11,125.90 புள்ளிகளாக உள்ளது.
Related Tags :
Next Story