ஜம்முவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை


ஜம்முவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை
x
தினத்தந்தி 25 July 2018 5:17 AM GMT (Updated: 25 July 2018 5:17 AM GMT)

ஜம்முவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. #AnantnagEncounter

அனந்த்நாக்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி சண்டை குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. 

நேற்று ஸ்ரீநகரிலுள்ள பாட்மாலோ பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் துப்பாக்கி குண்டு தாக்கி இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். அதே போல் கடந்த ஞாயிறன்று போலீஸ்காரரை கடத்தி கொன்ற லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்த்த 3 தீவிரவாதிகளை, காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். கடந்த ஜூலை 13-ந் தேதி அனந்த்நாக் ஷீர் போரா பகுதியில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story