இறந்த நண்பனை காப்பாற்ற மனிதர்களை போன்று காப்பாற்ற முயற்சி செய்த குரங்கு வீடியோ


இறந்த நண்பனை காப்பாற்ற மனிதர்களை போன்று  காப்பாற்ற முயற்சி செய்த  குரங்கு வீடியோ
x
தினத்தந்தி 25 July 2018 8:20 AM GMT (Updated: 25 July 2018 8:20 AM GMT)

மின்சாரம் பாயந்து இறந்த நண்பனை காப்பாற்றுவதற்கு மனிதர்களை போன்று குரங்கு காப்பாற்ற முயற்சி செய்த சம்பவம் அங்கிருந்தவர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

போபால்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள கார்கோன் பகுதியில் குரங்கு ஒன்று அங்கு செல்லும் மின்சார கம்பியியை தொட்டதால்,   மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து பலியாகியுள்ளது. இதைக் கண்ட சக குரங்கு ஒன்று அதை காப்பாற்றுவதற்காக மனிதர்கள் பயன்படுத்தும் (Cardiopulmonary resuscitation) இதய இயக்க மீட்பு  முறையை பின்பற்றியுள்ளது.

அதாவது வாயில் ஊதுவது, வயிற்றை பிடித்து அழுத்துவது மற்றும் முன்னும் பின்னும் தள்ளுவது போன்று இருந்துள்ளது. ஆனால் அந்த குரங்கு எழும்பாத காரணத்தினால் ஒரு ஏக்கத்துடன் மீண்டும் தன்னுடைய முயற்சியை துவங்குகிறது. இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் மக்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில், குரங்கின் மீது மின்சாரம் பாயந்ததால், அதன் மீது நெருப்பு பற்றியது. அதன் பின் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தது. அப்போது ஒரு குரங்கு அதை காப்பாற்றிய போராடியதாக கூறியுள்ளனர். இந்த வீடியோவைக் கண்ட பலரும் உருக்கமான கமெண்ட்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.



Next Story