அரியானா: மைனர் பெண்ணை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளர்


அரியானா: மைனர் பெண்ணை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளர்
x
தினத்தந்தி 25 July 2018 11:03 AM GMT (Updated: 25 July 2018 11:03 AM GMT)

அரியானாவில் மைனர் பெண்ணை 2 ஆண்டுகளாக பாலியல், வாலிபால் பயிற்சியாளர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடைபெற்றுள்ளது.


அரியானாவில் மைனர் சிறுமி, தனது வாலிபால் பயிற்சியாளரால் 2.5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஹரியானாவின் ரிவேரி கிராமத்தைச் சேர்ந்த மைனர் வயதுடைய வாலிபால் விளையாட்டு வீராங்கனையை அவரது பயிற்சியாளர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து வெளியே தெரிவித்தால், கொன்றுவிடுவேன் என்று அவரது பயிற்சியாளர் மிரட்டியதால் வேறு வழியின்றி அந்தப் பெண் போலீஸில் புகார் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரில் அந்தப் பெண் குர்கான், ரோதக் மற்றும் இன்னொரு இடத்தில் பயிற்சியாளர் கவுரவ் தேஷ்வால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பெண்ணின் புகாரை அடுத்து போலீஸ், போஸ்கோ சட்டத்தின் கீழ் கவுரவ் தேஷ்வால் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுவரை அவரை போலீஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீஸார், ‘இந்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சீக்கிரமே கவுரவ் தேஷ்வால் கைது செய்யப்படுவார்’ என்று கூறியுள்ளனர். 

Next Story