செல்போனில் வீடியோ எடுத்தபடி ஓட்டிய கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஓட்டுநர் பலி


செல்போனில் வீடியோ எடுத்தபடி ஓட்டிய கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஓட்டுநர் பலி
x
தினத்தந்தி 26 July 2018 8:38 AM GMT (Updated: 26 July 2018 8:38 AM GMT)

செல்போனில் வீடியோ எடுத்தபடி ஓட்டிய கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலியாகி உள்ளார்.

நைனிடால்,

உத்தராகண்டில் நைனிடால் நகரில் மலை பிரதேசத்தில் கூரிய வளைவுகள் நிறைந்த சாலைகளில் தீபு குன்வார் (வயது 28) என்பவர் தனது இரு நண்பர்களான தீபு (வயது 25) மற்றும் சஞ்சு சிங் (வயது 22) ஆகியோருடன் காரில் சென்றுள்ளார்.

அவர் கார் பயணத்தினை செல்போன் ஒன்றில் வீடியோ எடுத்தபடி ஓட்டியுள்ளார்.  இதில் சாலையில் இருந்து அருகே பள்ளத்தாக்கு ஒன்றில் கார் கவிழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் குன்வார் பலியாகி உள்ளார்.  அவரது இரு நண்பர்களும் காயமடைந்து உள்ளனர்.  விபத்து நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்த வீடியோ காட்சியின் வழியே இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

அதில் அவர்கள் 3 பேரும் அதிர்ச்சியில் அலறி உள்ளனர்.  குன்வாரின் கட்டுக்குள் இருந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழும்பொழுது அவர்கள், நாங்கள் சாக போகிறோம் என சத்தம் போட்டுள்ளது வீடியோவில் பதிவாகி உள்ளது.


Next Story