தேசிய பங்கு சந்தை; நிப்டி குறியீடு முதன்முறையாக 11,400 புள்ளிகளை எட்டியது
தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு முதன்முறையாக 11,400 புள்ளிகளை எட்டியது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 222.03 புள்ளிகள் உயர்ந்து 37,778.19 புள்ளிகளாக உள்ளது. இதற்கு முந்தைய உச்சத்தினை விட இது உயர்ந்த அளவாகும்.
இதேபோன்று தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு முதன்முறையாக 11,400 புள்ளிகளை எட்டியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 6 பைசாக்கள் உயர்ந்து ரூ.68.54 ஆக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளால் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரிப்பினால் 2வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்து உள்ளது.
Related Tags :
Next Story