மும்பையில் பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து


மும்பையில் பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 8 Aug 2018 11:27 AM GMT (Updated: 8 Aug 2018 11:27 AM GMT)

மும்பையில் பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை மஹால் சாலையில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் மாலை மூன்று மணியளவில் தீ விபத்து நேரிட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 தீயணைப்பு வாகனங்கள், 2 ஜம்மோ டேங்கர்கள் சென்றுள்ளது. இதற்கிடையே வெடிப்பு சம்பவம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தீ விபத்தினால் நேரிட்ட சேதம் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Next Story