டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் கொடி ஏற்றினார்


டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2018 10:15 PM GMT (Updated: 15 Aug 2018 7:25 PM GMT)

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் தேசியகொடி ஏற்றினார்.

புதுடெல்லி,

சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள வைகை மற்றும் பொதிகை தமிழ்நாடு இல்லங்களில் தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையருமான ஜஸ்பீர்சிங் பஜாஜ் தேசியகொடியை ஏற்றிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மற்றொரு முதன்மை உறைவிட ஆணையர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story