வாஜ்பாய் பாராளுமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்தது எப்போது?
இந்திரா காந்தியின் அரசுக்கு எதிராக போராடும் விதமாக வாஜ்பாய் பாராளுமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்தார். #Vajpayee #RIPVajpayee
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இப்போதைய பா.ஜனதா அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது. பல மாதங்களாகவே விமர்சனங்களை எதிர்க்கொள்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 45 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதே விவகாரத்தில் அப்போதைய இந்திரா காந்தியின் அரசை எதிர்த்தார். 1973-ம் ஆண்டு நவம்பரில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணை விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டார். அப்போது பாராளுமன்றத்திற்கு அவர் மாட்டு வண்டியில் வந்தார். மற்ற உறுப்பினர்கள் சைக்கிளில் சென்றார்கள்.
Related Tags :
Next Story