கேரள பேரிடர் நிவாரண நிதிக்கு மாதா அமிர்தானந்தமயி தேவி ரூ.10 கோடி உதவி


கேரள பேரிடர் நிவாரண நிதிக்கு  மாதா அமிர்தானந்தமயி தேவி ரூ.10 கோடி உதவி
x
தினத்தந்தி 17 Aug 2018 12:49 PM GMT (Updated: 17 Aug 2018 12:49 PM GMT)

கேரளாவில் மழையால், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம், 


இதனை தொடர்ந்து பல இடங்களில் இருந்தும் முதல்– மந்திரியின் நிவாரண நிதிக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.  கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளியில் இயங்கி வரும் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படுவதாக மாதா அமிர்தானந்தமயி தேவி அறிவித்துள்ளார். இதற்கான காசோலை முதல்– மந்திரி பினராயி விஜயனிடம் வழங்கப்பட்டது.

Next Story