காஷ்மீரில் வேன் ஆற்றுக்குள் பாய்ந்தது; 13 பேர் பலி


காஷ்மீரில் வேன் ஆற்றுக்குள் பாய்ந்தது; 13 பேர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2018 10:00 PM GMT (Updated: 21 Aug 2018 8:37 PM GMT)

காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள பத்தார் என்னும் மலையில் புகழ்பெற்ற துர்கா தேவி கோவில் உள்ளது.

ஜம்மு,

ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் துர்கா தேவியை தரிசிப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை 11 பக்தர்கள் ஒரு வேனில் துர்காதேவி கோவிலுக்கு சென்றனர். அந்த வேனில் டிரைவர், கிளீனரும் இருந்தனர். அந்த வேன் மலைப்பாதையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பல முறை உருண்டு அப்பகுதியில் ஓடும் செனாப் ஆற்றுக்குள் பாய்ந்தது.

இதில் அந்த வேனில் இருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுமி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாள்.


Next Story