கேரளாவில் வெள்ள சேதம்: அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி நிதி உதவி


கேரளாவில் வெள்ள சேதம்: அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி நிதி உதவி
x
தினத்தந்தி 23 Aug 2018 10:00 PM GMT (Updated: 23 Aug 2018 10:00 PM GMT)

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி நிதி உதவி வழங்குகிறது.

புதுடெல்லி,

ரூ.25 கோடி உடனடி நிவாரண பணிகளுக்காக முதல்–மந்திரியின் நிவாரண நிதிக்கும், ரூ.25 கோடி மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்தல் பணிக்காகவும் வழங்கப்படும் என்று செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெள்ள நிவாரண நிதிக்கு அதானி குழும ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story