காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 24 Aug 2018 10:30 PM GMT (Updated: 24 Aug 2018 9:39 PM GMT)

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஸ்ரீநகர்,

சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவவீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது அங்குள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்குள் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை கண்ட ராணுவவீரர்கள் மற்றும் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உடனே வீட்டினுள் இருந்த பயங்கரவாதிகள் ராணுவவீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

அதனை தொடர்ந்து ராணுவவீரர்களும், போலீசாரும் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அந்த வீட்டினுள் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. எனவே அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளுடனான சண்டை தொடர்வதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story