3 வயது சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்; பெற்றோர் உள்பட 3 பேர் கைது
3 வயது சிறுமியை கொன்ற வழக்கில் பெற்றோர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் நக்லா பஜர்க் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ஷமிம் மற்றும் அவரது மனைவி குஷ்னாசீப். இவர்களது 3 வயது மகள் லிபா.
இந்த நிலையில், கடந்த மே 2ந்தேதி சிறுமி லிபா கொல்லப்பட்டு கிடந்துள்ளார். இந்த கொலையை பழைய பகையால் ஷமிமின் சகோதரர் செய்துள்ளார் என்று காவல் நிலையத்தில் ஷமிம் புகார் பதிவு செய்துள்ளார்.
ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் பெற்றோரே நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஷமிம், குஷ்னாசீப் மற்றும் ஷமிமின் நண்பர் அப்பாஸ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் போலீசார் 14 நாட்களுக்குள் குற்ற பத்திரிகை தயார் செய்துள்ளனர். நாள்தோறும் என்ற அடிப்படையில் இரண்டரை மாதங்களில் நீதிமன்ற விசாரணை நடந்து முடிந்துள்ளது. இந்த வழக்கின் தண்டனை விவரம் ஆகஸ்டு 28ந்தேதி வழங்கப்பட உள்ளது.