ஓரினச்சேர்க்கை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
ஓரினச்சேர்க்கையை குற்றமாக்குவதை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
புதுடெல்லி,
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவு குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இது தவிர அபராதமும் உண்டு. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூலை மாதம் 17–ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story