உத்தரகாண்ட்டில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி + "||" + Senior officials have reached the spot and injured have been admitted to hospital for treatment, the official added.
உத்தரகாண்ட்டில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். #UPAccident
அல்மோரா,
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோஹன்ரி அருகேயுள்ள பாட்ரோஜ்கான் - பிஹிகியாசன் மலைப்பாதையில் சென்ற பேருந்து நிலைத்தடுமாறி திடீரென 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 30 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து கவிந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 21 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கார்ஹ்வால் மோட்டார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 30 பேர் ராம் நகரிலிருந்து காரிசன் பகுதியை நோக்கி செல்கையில் பாட்ரோஜ்கான் - மோஹன்ரி மலைப்பகுதியில் 50 அடி ஆழத்திற்க்கு பஸ் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டது என கூறினார்.
இதனிடையே காயமடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரனை செய்து வருகிறனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #JammuLandslide