டெல்லி செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகள் கைது


டெல்லி செங்கோட்டை அருகே  2 பயங்கரவாதிகள் கைது
x
தினத்தந்தி 7 Sep 2018 10:25 AM GMT (Updated: 7 Sep 2018 10:25 AM GMT)

டெல்லி செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகளை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  நாசவேலைக்கு அவர்கள் ஈடுபட்டனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்தாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.  முதற்கட்ட விசாரணையில் ஐ.எஸ்.ஜே.கே என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

டெல்லி செங்கோட்டை அருகே 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பயங்கரவாதிகளை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story