எதிர்க்கட்சிகள் பொய்கள் நிறைந்தவை, மகா கூட்டணியும் தோற்கும் - பிரதமர் மோடி


எதிர்க்கட்சிகள் பொய்கள் நிறைந்தவை, மகா கூட்டணியும் தோற்கும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 9 Sep 2018 1:26 PM GMT (Updated: 9 Sep 2018 1:26 PM GMT)

எதிர்க்கட்சிகள் பொய்கள் நிறைந்தவை, எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணி தோல்வியடையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதா கட்சிக்கு சவால் விடுக்க இயலாதவை. எதிர்க்கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது, பிரச்சனைகளுக்காக கிடையாது என்று கூறியுள்ளார். 

ஆட்சியிலிருக்கும் போது தோல்வியை தழுவியவர்கள், எதிர்க்கட்சிகளாகவும் தோல்வியாளர்கள்தான் என விமர்சனம் செய்துள்ளார். 

“கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் போட்டியிட தயாராக உள்ளோம், பொய்களுடன் போட்டியிட எங்களுக்கு தெரியாது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். பா.ஜனதா தேசிய நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்,  எதிர்க்கட்சிகளால் அமைக்கப்படும் மகா கூட்டணியையும் பிரதமர் மோடி நிராகரித்துவிட்டார் என கூறியுள்ளார். “எதிர்க்கட்சிகளின் தலைவர் தெரியவில்லை, அவர்களுடைய நோக்கம் ஊழல்,” என கூறியுள்ளார் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். 

Next Story