கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் முறையீடு
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி,
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீட்டுள்ளது. அமலாக்கத்துறையின் முறையீட்டை இன்று பிற்பகல் பாடியாலா நீதிமன்றம் விசாரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story