மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்கை சூறையாடிய காங்கிரஸ் கட்சியினர்


மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்கை சூறையாடிய காங்கிரஸ் கட்சியினர்
x
தினத்தந்தி 10 Sep 2018 7:32 AM GMT (Updated: 10 Sep 2018 7:32 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.


உஜ்ஜைன்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

பந்த் காரணமாக பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. குஜராத்தில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்துள்ளனர். பீகாரில் பாட்னாவில் ஜன் அதிகர் கட்சியை சேர்ந்தவர்கள் பந்த்தின் போது இயக்கப்பட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். 

இதில் பல கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதே போன்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயின் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் பங்க்கை அடித்து நொறுக்கினர்.

Next Story