கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு


கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Sep 2018 11:45 PM GMT (Updated: 10 Sep 2018 8:59 PM GMT)

கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.

கொச்சி,

முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் நேற்று கொச்சியில் நிருபர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் பின்னர் அந்த கடிதம் அங்கிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, கேரள எம்.பி.க்களை சந்திக் குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாகவும் கே.சி.வேணுகோபால் கூறினார்.

கேரள எம்.பி.க்கள் குழு ஏற்கனவே ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ள நிலையில், மீண்டும் அவரை சந்தித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்றும் அப்போது அவர் கூறினார்.

Next Story