நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல்
நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
‘பனாமா கேட்’ ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் மறைவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:, நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் குல்சூம் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story