அசாமில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம்


அசாமில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம்
x
தினத்தந்தி 12 Sep 2018 5:42 AM GMT (Updated: 12 Sep 2018 5:42 AM GMT)

அசாமில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீகார், பெங்காலிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த சில நாட்களாகவே டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அடிக்கடி லேசனா நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. அண்டை நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக இங்கு லேசான நில அதிர்வு உணரப்படுவதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாவில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 5.15 மணியளவில் ஏற்பட்ட லேசான நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகி உள்ளது. அதேபோல் ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்திலும் இன்று காலை 5.43 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1-ஆக பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில், அசாமில் உள்ள கோக்ரஜார் பகுதியில் இன்று 5.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பீகார், பெங்காலிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  

Next Story