போலீஸ் நிலையத்தில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி


போலீஸ் நிலையத்தில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி
x
தினத்தந்தி 12 Sep 2018 6:24 AM GMT (Updated: 12 Sep 2018 6:24 AM GMT)

போலீஸ் நிலையத்தில் போலீசார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

போபால்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில்  ராஜவத் ( வயது 25) அவரது நண்பர் மான் சிங்  ஆகியோர் கைது செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டனர். இவரகள் இருவரும் பிகிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள்  போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக சிறைக்கு வெளியே அமரவைக்கப்பட்டு இருந்தனர். 

இந்த நிலையில் ராஜவத்  அங்கு இருந்த 2 போலீஸாரைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டார், ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு பிடிபட்டார். ராஜவத்
தாக்கியதில் 2 போலீசார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராஜவத் போலீசாரை தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில்  பதிவாகி உள்ளது. 


Next Story