கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் : பிஷப்புக்கு விசாரணை குழு சம்மன்


கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் : பிஷப்புக்கு விசாரணை குழு சம்மன்
x
தினத்தந்தி 12 Sep 2018 8:59 AM GMT (Updated: 12 Sep 2018 8:59 AM GMT)

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பேராயர் பிராங்கோ முலக்கல்லுக்கு விசாரணை குழு சம்மன் அனுப்பி உள்ளது.


திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.

அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்னும் அரசு விசாரணையில் திருப்தி ஏற்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஆனால் பிஷப் பிராங்கோ தன் மீதான புகாரை மறுத்து உள்ளார்.

இந்த நிலையில் இந்த  விவகாரத்தில் தன் மீதான வழக்கை வாபஸ் பெற்று கொண்டால் ரூ 5 கோடி தருவதாக கூறியதாக பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர்  குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்த நிலையில்  பிஷப் மீது வலுவான சான்றுகள் கிடைத்துள்ளதாக விசாரணை குழு உறுதிபடுத்தி உள்ளது. இது தொடர்பாக பிஷப் பிராங்கோவுக்கு சம்மன் அனுப்பபட்டு உள்ளது. பிஷப் எட்டுமன்னூரில் விசாரிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Next Story