போர் விமானங்கள்- ஏவுகணைகள் வாங்குவதை வரவேற்கும் இந்திய விமானப்படை தளபதி
எதிரிகள் சும்மா இருக்க வில்லை என ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷ்ய ஏவுகணைகள் வாங்குவதை இந்திய விமானப்படை தளபதி வரவேற்று உள்ளார்.
புதுடெல்லி
ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதன் மூலம் இந்தியா தனது பாதுகாப்பை பலபடுத்திக்கொண்டுள்ளதாக இந்திய விமானப்படைத் தளபதி பிரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பாஜக தரப்பில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரஃபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், டெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்று பேசிய இந்திய விமானப்படைத் தளபதி பிரேந்திர சிங், நமது அண்டை நாடுகள் பலம் பொருந்தியிருக்கும் நிலையில், இது போன்ற போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வாங்குவது இந்தியாவிற்கு இன்றியமையாதது.
நமது அண்டை நாடுகள் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. சீனா தனது வான்வழி சக்தியை கணிசமாக மேம்படுத்துகிறது.இந்தியாவின் விரோதிகள் தங்கள் நோக்கங்களை ஒரே இரவில் மாற்றிக்கொள்ள முடியும் மற்றும் பாதுகாப்பு படைகள் "நமது எதிரிகளின் சக்தியுடன் இணையாக வேண்டும்"
ராஃபெல் மற்றும் எஸ் -400 ஆகியவற்றை வழங்குவதன் மூலம், நமது வீழ்ச்சியடைந்த எண்ணிக்கையின் குறைபாடுகளை எதிர்கொள்ள அரசாங்கம் இந்திய விமானப்படைகளை பலப்படுத்துகிறது,அவர் இரண்டு ரபேல் ஸ்காண்டிரன்களை கொள்முதல் செய்வதையும் நியாயப்படுத்தினார், மேலும் இதுபோன்ற கொள்முதல்களின் எடுத்துக்காட்டுகள் உள்ளன என கூறினார்.
42 ஸ்காண்டிரன்களின் அனுமதியளிக்கப்பட்ட வலிமைக்கு எதிராக நாம் எண்களைக் கொண்டிருக்கவில்லை, நாங்கள் 31 வரை குறைவாக இருக்கிறோம். நாங்கள் 42 ஸ்காண்டிரன்கள் வைத்திருந்தாலும், நாம் இருவரும் பிராந்திய விரோதிகளின் ஒருங்கிணைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறோம்.என கூறினார்.
Related Tags :
Next Story