அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் - விஜய் மல்லையா மீண்டும் பேட்டி


அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் - விஜய் மல்லையா மீண்டும் பேட்டி
x
தினத்தந்தி 12 Sep 2018 4:09 PM GMT (Updated: 12 Sep 2018 4:09 PM GMT)

அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் என விஜய் மல்லையா கூறியுள்ளார்.


லண்டன், 


வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையா நாட்டைவிட்டு புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன் என்று லண்டனில் கூறியது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.  விஜய் மல்லையா நிதியமைச்சரை சந்தித்தேன் என்று பேட்டியளித்ததும் இவ்விவகாரத்தை கையிலெடுத்துள்ள காங்கிரஸ், சந்திப்பில் யார் இருந்தது என்பதை விளக்குமாறு மத்திய அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது. விஜய் மல்லையாவிடம் இருந்து இதுபோன்ற பேட்டி வெளியாகியதும் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜெட்லியின் விளக்கத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, ஜெட்லியிடம் பாராளுமன்றத்தில்தான் பேசினேன். அதிகாரப்பூர்வமான சந்திப்பு கிடையாது. யாரும் என்னை காப்பாற்றவில்லை, நான் ஓடவேண்டிய அவசியம் கிடையாது, என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மீடியாக்கள் உருவாக்கியதுதான். லண்டன் செல்லப்போகிறேன் என அருண் ஜெட்லியிடம் கூறினேன் எனவும் குறிப்பிட்டார். 


Next Story