“விஜய் மல்லையாவை தப்ப அனுமதித்தது ஏன்?” - காங்கிரஸ் கேள்வி


“விஜய் மல்லையாவை தப்ப அனுமதித்தது ஏன்?” - காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 12 Sep 2018 9:15 PM GMT (Updated: 12 Sep 2018 7:28 PM GMT)

விஜய் மல்லையாவை தப்ப அனுமதித்தது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

நிதி மந்திரியை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியது பற்றி காங்கிரஸ் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “விஜய் மல்லையா உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்கு மத்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. விஜய் மல்லையா ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார்? அவருக்கும், நிதி மந்திரிக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்டது என்ன? என்று அறிந்துகொள்ள நாடு விரும்புகிறது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

அருண்ஜெட்லி பதவி விலக ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Next Story