ஆங்கிலம் ஒரு நோய் ; இந்தி ஒற்றுமையை குறிக்கும் சின்னம் -குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு


ஆங்கிலம்  ஒரு நோய் ; இந்தி  ஒற்றுமையை குறிக்கும் சின்னம் -குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு
x
தினத்தந்தி 15 Sep 2018 8:37 AM GMT (Updated: 15 Sep 2018 8:37 AM GMT)

சமூகம், அரசியல் மற்றும் மொழி ஆகியவற்றின் ஒற்றுமையை குறிக்கும் சின்னம் இந்தி மொழி என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.


புதுடெல்லி


இந்தி தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களால் இந்தி மொழி பேசப்படுவதாக தெரிவித்தார். பிராந்திய மொழிகளில் பல புகழ்மிக்க இலக்கியங்கள் உள்ளதாகவும், அதனை இந்தியில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற ஆங்கில மொழி  ஒரு நோய் என்றும் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டார். 

Next Story