என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது -கார்த்தி சிதம்பரம்


என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது -கார்த்தி சிதம்பரம்
x
தினத்தந்தி 17 Sep 2018 10:49 AM GMT (Updated: 17 Sep 2018 10:49 AM GMT)

என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது என ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளார்.

புதுடெல்லி

ஏர்செல்–மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முறையே 2011 மற்றும் 2012–ம் ஆண்டுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2 வழக்குகளிலும் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் தரப்பில்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது. 6 முறை நேரில் ஆஜராகியும், 47 கேள்விகளுக்கு பதில் அளித்தும் ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத்துறை முயற்சி செய்கிறது என ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Next Story