பீகாரில் பள்ளி கூட முதல்வர் கற்பழித்ததில் 5ம் வகுப்பு மாணவி கர்ப்பிணி ஆன அதிர்ச்சி தகவல்


பீகாரில் பள்ளி கூட முதல்வர் கற்பழித்ததில் 5ம் வகுப்பு மாணவி கர்ப்பிணி ஆன அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 20 Sep 2018 4:02 PM GMT (Updated: 20 Sep 2018 4:02 PM GMT)

பீகாரில் பள்ளி கூட முதல்வர் கற்பழித்ததில் 5ம் வகுப்பு மாணவி கர்ப்பிணியாகி உள்ளார்.

பாட்னா,

பீகாரின் பாட்னா நகரில் புல்வாரிஷெரீப் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் பள்ளி கூடம் ஒன்று உள்ளது.  இதன் முதல்வராக ராஜ் சிங்கானியா உள்ளார்.

இந்த பள்ளி கூடத்தில் படித்து வந்த 11 வயது நிறைந்த 5ம் வகுப்பு மாணவியை முதல்வர் மற்றும் கணக்காளர் அசோக் குமார் கற்பழித்து உள்ளனர்.  இதில் அந்த மாணவி கர்ப்பிணியாகி உள்ளார்.

சமீபத்தில் மாணவி தனது பெற்றோரிடம் உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளது பற்றி கூற அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  அங்கு மாணவி கர்ப்பிணியாக உள்ளார் என மருத்துவர் தெரிவித்து உள்ளார்.  இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி மாணவியிடம் அவர்கள் கேட்டுள்ளனர்.  அதற்கு, பள்ளி கூட முதல்வர் மற்றும் கணக்காளர் சில காலத்திற்கு முன் தன்னை கற்பழித்தனர்.  அதுபற்றி வீடியோ ஒன்றும் எடுத்துள்ளனர்.  இதனை யாரிடத்திலாவது கூறினால் சமூக வலை தளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டினார் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து மாணவியின் தந்தை மகளில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பள்ளி கூட முதல்வர் மற்றும் கணக்காளரை கைது செய்துள்ளனர்.


Next Story