வங்கி கொள்ளை முயற்சியில் இரண்டு பாதுகாவலர்கள் உயிரிழப்பு


வங்கி கொள்ளை முயற்சியில் இரண்டு பாதுகாவலர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Sep 2018 9:06 AM GMT (Updated: 21 Sep 2018 9:06 AM GMT)

நொய்டாவில் வங்கி கொள்ளை முயற்சியில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த இரு பாதுகாவலர்கள் உயிரிழந்துள்ளனர்.



உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இன்று காலை பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது கொள்ளையர்கள் அவர்களுடைய தலையில் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர், இதனால் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறது. உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது என போலீஸ் தெரிவித்துள்ளது.

Next Story