காஷ்மீர் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை


காஷ்மீர் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 21 Sep 2018 1:54 PM GMT (Updated: 21 Sep 2018 1:54 PM GMT)

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


ஸ்ரீநகர்,


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவின் சோக்பாபா பாகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தொடர்பாக தகவல் அறிந்ததும் ராணுவம், போலீஸ் கூட்டாக தேடுதல் வேட்டையை தொடங்கியது. நேற்று மதியம் தொடங்கப்பட்ட தேடுதல் வேட்டை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இன்று முடிவுக்கு வந்துள்ளது. நேற்று இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், இன்று இரண்டாவது நாள் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சமீபத்தில் எல்லை வழியாக இந்தியாவிற்குள் வந்துளனர், அவர்கள் இங்கிருந்து பிரிந்து பிற பகுதிகளுக்கு செல்லும் போதுதான் சண்டை நடந்துள்ளது என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story