ராஜஸ்தான்: பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி சுங்கச்சாவடி மீது பயங்கர மோதல்
ராஜஸ்தானில் பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி சுங்கச்சாவடி மீது பயங்கரமாக மோதியது.
கிஷ்னகார்,
ராஜஸ்தானில் உள்ள கிஷன்கார் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி மீது பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சுங்கச்சாவடியில் இருந்த தடுப்புச்சுவர்கள் சுக்கு நூறாக தகர்ந்தன. லாரியில் இருந்த பீர் பாட்டில்களும் பெட்டிகளோடு சாலையில் சிதறின.
#WATCH A truck rams into toll plaza in Rajasthan's Kishangarh; One person was injured in the incident (21.09.2018) (Source: CCTV footage) pic.twitter.com/GcG8v3dIly
— ANI (@ANI) September 22, 2018
இந்த விபத்தின் பயங்கர காட்சிகள், சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. ஜெய்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடைபெறும்போது, சுங்கச்சாவடியில் கட்டணம் கட்டிக்கொண்டு இருந்த எஸ்.யூ.வி ரக காரும் சேதம் ஆனது. விபத்து நடைபெற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்தில், லாரியின் ஓட்டுநர் மட்டும் காயம் அடைந்தார்.
Related Tags :
Next Story