பாலியல் புகாரில் கைதாகியுள்ள பேராயர் மூலக்கல் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்
பாலியல் புகாரில் கைதாகியுள்ள பேராயர் மூலக்கல் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
கோட்டயம்,
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கூறினார். கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ மூலக்கல் நேரில் ஆஜரானார்.
வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ மூலக்கல் கூறியதாக தகவல்கள் வெளியானது. பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ மூலக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று முன்தினம் அறிவித்தது.
இதற்கிடையே, தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று பிராங்கோ மூலக்கல்லிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கோட்டயம் நீதிமன்றத்தில் பேராயர் மூலக்கல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பேராயர் மூலக்கல்லை மூன்று நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்குமாறு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story