விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்


விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Sep 2018 11:56 AM GMT (Updated: 24 Sep 2018 11:56 AM GMT)

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை வருவாய் புலானாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாகபட்டினம்,

விசாகப்பட்டின ரயில் நிலையத்திற்கும் வரும் பயணியிடம் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி, ரயில் பயணி ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சுமார் 2 கிலோ எடையுள்ள தங்கத்தை அந்த நபர் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

தங்கத்தை தகடுகள் மற்றும் கட்டிகள் வடிவில் கிடாரிலும், பைகளிலும் மறைத்து அந்த நபர் கடத்தி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ 60 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story