‘லவ் ஜிகாத்’ உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை தாக்கும் போலீஸ், விசாரணைக்கு உத்தரவு


‘லவ் ஜிகாத்’ உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை தாக்கும் போலீஸ், விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 25 Sep 2018 2:18 PM GMT (Updated: 25 Sep 2018 2:18 PM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞருடன் பழகிய இளம்பெண்ணை போலீஸ் தாக்கியது சர்ச்சையாகியுள்ளது.

மீரட்,

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மருத்துவம் படிக்கும் மாணவி ஒருவர் இஸ்லாமிய இளைஞருடன் பழகியுள்ளார். அவர்களை பிடித்து லவ் ஜிகாத் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் போலீசில் ஒப்படைத்துள்ளனர். இளம்பெண்ணை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போலீசார் அவரை கடுமையாக தாக்குகிறார். பெண் போலீசார் ஒருவர் இளம்பெண்ணை தாக்குவதும், மற்றொரு அதிகாரி அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இஸ்லாமிய இளைஞருடன் பழகியதை கண்டித்து போலீசார் பாடம் எடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக விசாரிக்குமாறு மாவட்ட கண்காணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக உத்தரபிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.

Next Story