ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் ; ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டனர்


ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் ; ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டனர்
x
தினத்தந்தி 1 Oct 2018 8:43 AM GMT (Updated: 1 Oct 2018 8:43 AM GMT)

ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டனர். இதில் ஒருவர் பலியானார்.

ஐதராபாத்

தெலுங்கானாவின் ஐதராபாத்தில் இருந்து 190 கிமீ தொலைவில் உள்ள  ஜக்டியா நகர்.   இந்த ஊரில் உள்ள  ஒரு பள்ளியில்  10 ம் வகுப்பு  படித்து வந்த 2 மாணவர்கள்  ஒரே மாணவியை காதலித்து உள்ளனர். இதில் அந்த மாணவர்களுக்குள் தகராறு இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில்  நேற்று மாலை 2 மாணவர்களும் மது அருந்தி உள்ளனர். போதையில் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் தீ வைத்து கொண்டனர்.

இதில் மஹேந்தர் என்ற மாணவர்  அதே இடத்தில் பலியானார். ரவி தேஜா என்ற மாணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில்  புதிய திருப்பமாக  ஒரு மூன்றாவது பையனும் இந்த வழக்கில்  சம்பந்தம் இருப்பது தெரியவந்து உள்ளது. இது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சம்பவ இடத்தில் இருந்து போலீசார் பீர் பாட்டில்கள் மற்றும் மொபைல் போன்களை கைப்பற்றி உள்ளனர். இது  கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இது குறித்து போலீசார் கூறும் போது, 

மஹேந்தர் மற்றும் ரவி  தேஜா  இருவரும் ஒரு மிஷனரி பள்ளியில் வகுப்பு தோழர்களாக இருந்தனர், மற்றும் இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை  காதலித்து வந்துள்ளனர். அந்த விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது என கூறினர்.

Next Story