சட்டீஸ்காரில் மாவட்ட ரிசர்வ் படை என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொலை


சட்டீஸ்காரில் மாவட்ட ரிசர்வ் படை என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 3 Oct 2018 12:36 PM IST (Updated: 3 Oct 2018 12:36 PM IST)
t-max-icont-min-icon

சட்டீஸ்காரில் மாவட்ட ரிசர்வ் படையினரின் என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ராய்பூர்,

சட்டீஸ்காரின் தண்டேவாடா மற்றும் சுக்மா எல்லை பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என தகவல் அறிந்து மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.  அவர்களை நோக்கி பதிலடியாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.  இத்தகவலை சுக்மா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிசேக் மீனா தெரிவித்து உள்ளார்.
1 More update

Next Story