மருமகளுக்கு சிறுநீரகம் தானம் கொடுத்த மாமியார்


மருமகளுக்கு சிறுநீரகம் தானம் கொடுத்த மாமியார்
x
தினத்தந்தி 6 Oct 2018 7:58 AM GMT (Updated: 6 Oct 2018 7:58 AM GMT)

பெண்ணுக்கு சிறுநீரகம் தர அவரின் பெற்றோர் மறுத்த நிலையில் மாமியார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர் நகரை சேர்ந்தவர் சோனிகா (32). திருமணமான இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவி (60) உடன் வசித்து வந்தார். இந்நிலையில் சோனிகாவின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. இதையடுத்து டயாலிஸிஸ் செய்து வந்த அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

சோனிகாவுக்கு அவரின் தாய் பன்வாரி தேவி, தந்தை மற்றும் சகோதரரின் சிறுநீரகம் பொருந்திய நிலையிலும் அவர்கள் யாரும் கொடுக்க  முன்வரவில்லை. இதையடுத்து சோனிகாவின் மாமியார் கனிதேவி தனது சிறுநீரகத்தை மருமகளுக்கு கொடுக்க முன்வந்தார்.

இதையடுத்து சோனிகாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. என் மாமியாருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன், அவர் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சோனிகா.

Next Story