டிஜிட்டல் சாமியாரான நித்யானந்தா கிராபிக்ஸ் காட்சிகளுடன் வீடியோ
டிஜிட்டல் சாமியாரான நித்யானந்தா கிராபிக்ஸ் காட்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பரமசிவோகம் கேப்ஸ்யூல் - 50 என்ற தலைப்பில் நித்தியானந்தாவை வைத்து பாடல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதை கேட்ட நெட்டிசன்கள் இந்த பாடலை எதில் சேர்த்து கொள்வது என்றே தெரியவில்லை என்று கூறுகின்றனர். ஆங்கில பாடல் நெடியில் தமிழ் வார்த்தைகளும், ஆங்கில வார்த்தைகளும் வந்து விழுகிறது. விழும் அத்தனை வார்த்தைகளிலும் நித்யானந்தா புகழே!பக்தைகள் இந்த பாடலை பாட பாட, நித்யானந்தா சிரித்தமேனிக்கு நின்று கொண்டே இருக்கிறார்.
பாடல் முடியும்வரை ஒரே போஸ்தான். தாறுமாறாக ஓடுகிறது சாமியார் நித்யானந்தாவின் இந்த வீடியோ பாடலில் சும்மா கிராபிக்ஸ் பூந்து விளையாடியிருக்கு. திடீர் திடீரென்று அவரது கையை ஆசி வழங்குவதுபோல மேலே தூக்குகிறார். அப்போது கையிலிருந்து புகை வெளியேறுகிறது. காடுகள், மலைகள் என்று தவமிருந்த நம் யோகிகள், முனிவர்களுக்கு நடுவில் டிஜிட்டல் சாமியார் நித்யானந்தாவின் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது!
Related Tags :
Next Story