பாலியல் தொல்லை புகார்: ‘பெயரை சொல்லி அசிங்கப்படுத்துவதுடன் விட்டு விடுகிறார்கள்’ - தேசிய மகளிர் ஆணையம் ஆதங்கம்


பாலியல் தொல்லை புகார்: ‘பெயரை சொல்லி அசிங்கப்படுத்துவதுடன் விட்டு விடுகிறார்கள்’ - தேசிய மகளிர் ஆணையம் ஆதங்கம்
x
தினத்தந்தி 10 Oct 2018 9:30 PM GMT (Updated: 10 Oct 2018 8:08 PM GMT)

பாலியல் தொல்லையில் பாதிக்கப்படும் பெண்கள், பெயரை சொல்லி அசிங்கப்படுத்துவதுடன் விட்டு விடுகிறார்கள் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள், சமூக வலைத்தளங்களில் ‘மீ டூ ஹேஷ்டாக்’கில் இணைந்து புகார் கூறுவது தொடர் கதை ஆகி வருகிறது.

ஆனால் பாதிப்புக்கு ஆளாகிற பெண்கள், தங்களுக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கிறார்களா என்றால் அது இல்லை.

இதுபற்றி தேசிய மகளிர் ஆணையம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “ பல விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களை பாலியல் தொல்லை செய்தவர்களின் பெயரை மட்டும் சொல்லி, அசிங்கப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் முறைப்படி புகார் தர விரும்பவில்லை என்பதை தேசிய மகளிர் ஆணையம் கண்டிருக்கிறது” என்று கூறி உள்ளது.

மேலும், “பணி இடங்கள் உள்ளிட்டவற்றில் பெண்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் காப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இத்தகைய பாலியல் அத்துமீறல்கள், பெண்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை மீறுகிறது. இத்தகைய பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story