ஜம்மு காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிக்கி இருப்பதாக தகவல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் ஷார்குண்டா அருகில் உள்ள பாலா என்ற கிராத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
Related Tags :
Next Story