சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் - மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு


சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் - மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 12 Oct 2018 12:37 PM GMT (Updated: 12 Oct 2018 12:37 PM GMT)

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் என்று மலையாள நடிகர் கொல்லம் துளசி தெரிவித்துள்ளார்.

கொல்லம்,

மலையாள நடிகரரும்  பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக பிளக்க வேண்டும்.  ஒன்றை  திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும் என்றார்.

சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதற்கு பெயர் போனவர் கொல்லம் துளசி. முன்னதாக கடந்த வாரம் அவரிடம் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் திலீப் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, மீடியா இதை ஊதிப் பெரிதாக்கி விட்டது. நாட்டில் இதைவிட பெரிய பிரச்சனைகள் எல்லாம் உள்ளது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story