10 அடி நீள பாம்புகளை கையில் பிடித்து சர்வசாதரணாமாக விளையாடும் 3 வயது சிறுவன்!!


10 அடி நீள பாம்புகளை கையில் பிடித்து சர்வசாதரணாமாக விளையாடும் 3 வயது சிறுவன்!!
x
தினத்தந்தி 14 Oct 2018 9:54 AM GMT (Updated: 14 Oct 2018 9:54 AM GMT)

அரியானாவில் 3 வயது சிறுவன் 10 அடி நீள பாம்புகளை கையில் பிடித்து சர்வசாதரணாமாக விளையாடும் காட்டி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அரியானாவில் 3 வயது சிறுவன் ஒருவன் 10 அடி நீள பாம்புகளை சர்வசாதரணாமாக பிடிக்கும் காட்சி பார்போரை பிரம்மிக்க வைக்கும் விதமாக இருக்கிறது.

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழியே இருக்கிறது. அதுபோல பாம்பிற்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் அரியானாவில் இளம் கன்று பயமறியாது என்பதை போல 3 வயது குழந்தை  பாம்புடன் செய்யும் சாகசங்களை வார்த்தைகளில் சொல்லி மாலாது.

அரியானாவை சேர்ந்த 3 வயது குழந்தை, 10 அடி நீளமுள்ள பாம்புகளை அசால்ட்டாக பிடித்து விளையாடுகிறான். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தும் தங்களது செல்போனில் படம் பிடித்தும் செல்கின்றனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story