எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி


எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி
x
தினத்தந்தி 14 Oct 2018 10:19 AM GMT (Updated: 14 Oct 2018 10:19 AM GMT)

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்துள்ளது.


ஜம்மு,


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. திக்வார் செக்டாரில் இந்த அத்துமீறலுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்தது. இதுவரையில் இருதரப்பு சண்டை தொடர்பாக எந்தஒரு சேதமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வபோது பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்ப முயற்சி செய்து வருகிறது. 

Next Story