வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகர் 20 பேர் கும்பலால் கொலை


வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகர் 20 பேர் கும்பலால் கொலை
x
தினத்தந்தி 15 Oct 2018 10:58 AM GMT (Updated: 15 Oct 2018 10:58 AM GMT)

வாட்ஸ்அப் தகவலில் எதிரிகளுக்கு சவால் விட்ட ரியல் எஸ்டேட் தரகரை 20 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை கொண்டு கொலை செய்தது.

அவுரங்காபாத்,

மகாராஷ்டிராவில் வசித்து வந்த ரியல் எஸ்டேட் தரகர் மொயின் மெஹ்மூத் பதான் (வயது 35) என்பவருக்கும், மற்றொரு கும்பலுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.  இந்த நிலையில், நேற்று மாலை வாட்ஸ்அப் தகவல் ஒன்றில் தனது எதிரிகளுக்கு அவர் சவால் விடுத்து உள்ளார்.

இதனை அடுத்து சில மணிநேரங்களில் அவுரங்காபாத் நகரில் ஹர்சூல் பகுதியில் பாத்திமாநகர் என்ற இடத்தில் 20 இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் வந்துள்ளது.  அந்த கும்பல் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியது.

இதனை தடுக்க வந்த அவரது மருமகன் இர்பான் ஷேக் ரகீம் மீது கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.  இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் மொயின் மெஹ்மூத் மரணம் அடைந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 6 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.  இரு குழுக்கள் இடையேயான மோதலில் இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ள போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story