பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்


பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்
x
தினத்தந்தி 17 Oct 2018 9:50 AM GMT (Updated: 17 Oct 2018 9:50 AM GMT)

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, ஒரு காவலர் வீரமரணம் அடைந்துள்ளார்.

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள படே கதல் பகுதியில்  இன்று அதிகாலை தேடுதல் வேட்டையின் போது குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினருடன் இணைந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  காவலர் ஒருவரும் வீரமரணம் அடைந்தார். உயிரிழந்த 3 தீவிரவாதிகளில் இருவர் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்புப் படையினரிடமிருந்து அவர்கள் திருடிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜம்முகாஷ்மீர் டிஜிபி தெரிவித்துள்ளார். இதனிடையே, பாரமுல்லாவின் பட்டன் பகுதியில், போலீசார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.

Next Story